TNPSC Thervupettagam

அரசுப் பத்திரங்களின் ஏல முறையில் மாற்றம்

July 8 , 2021 1110 days 536 0
  • 2 ஆண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு, 10 ஆண்டு மற்றும் 14 ஆண்டு என்ற கால வரையறையினைக் கொண்டுள்ள முக்கிய குறியீட்டுப்  பத்திரங்கள் மற்றும் வீத மாற்றுப் பத்திரங்கள் ஆகியவை ஒரு பொது விலை அடிப்படையிலான ஏல முறையில் வழங்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
  • இருப்பினும் 30 ஆண்டு மற்றும் 40 ஆண்டு காலவரையறையுள்ள முக்கிய குறியீட்டுப்  பத்திரங்கள் பலவிலை அடிப்படையிலான ஏல முறையிலேயே வழங்கப்படும்.
  • அரசுப் பத்திரங்களானவை வர்த்தகம் செய்வதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தப் படுகின்றன.
  • அரசுப் பத்திரங்களானவை மத்திய (அ) மாநில அரசுகளால் வழங்கப் படுகின்றன.
  • இது அரசின் கடன்களை அங்கீகரிக்கிறது.
  • இரு வகையிலான பத்திரங்கள் உள்ளன.
  • குறுகிய காலப் பத்திரங்கள் – இவை கருவூலப் பத்திரங்கள் என அழைக்கப் படுகின்றன.
  • இதன் கால வரம்பு ஒரு வருடத்திற்கும் குறைவானதாகும்.  
  • இது 91 நாள், 182 நாள் மற்றும் 364 நாள் ஆகிய மூன்று காலவரம்புகளில் வழங்கப் படுகிறது.
  • நீண்ட காலப் பத்திரங்கள் – இவை வழக்கமாக அரசுப் பத்திரங்கள் அல்லது தேதியிட்ட பத்திரங்கள் என அழைக்கப் படுகின்றன.
  • இவற்றிற்கான காலவரம்பு ஒரு வருடத்திற்கும் மேலானது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்