TNPSC Thervupettagam

அரசுப் பள்ளிகளில் மழலையர் பள்ளி

January 25 , 2019 2003 days 647 0
  • தமிழ்நாடு முதல்வர் ஜனவரி 21-ம் தேதியன்று மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களாக உள்ள அரசு இடைநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியில் மாண்டிச்சோரி கல்வி வழியில் அமைந்திருக்கும் மழலையர் கல்வி வகுப்புகளை குழந்தைகள் அணுகிடுவதற்கு ஏதுவாக ஒரு சோதனைத் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
  • இது தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
  • இது 2381 அங்கன் வாடிகளில் 52000 குழந்தைகளுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்த வகுப்புகள் அனைத்து 32 மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படும்.
  • இந்த பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களால் மேலாண்மை செய்யப்படும். மேலும் இப்பள்ளிகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
  • இதே நோக்கத்திற்காக அதிகப்படியாக உள்ள இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவர்.
  • குழந்தைகளுக்கு கல்வியளிக்க உள்ள ஆசிரியர்கள் சமக்ரா சிக்சா அபியான் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்படுவர்.
  • நான்கு பள்ளிச் சீருடைகள், ஒரு ஜோடி காலணி, எழுதுபொருள்கள் மற்றும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ் ஆகியன மாநில அரசால் வழங்கப்படும்.
  • இந்த திட்டம் மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவது மற்றும் பேசுவது, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை நாடுவதற்கு உதவிடும் என்று அரசு தளராத நம்பிக்கை கொண்டிருக்கின்றது.
  • இத்திட்டத்திற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.
  • இது மூன்று வருடங்களுக்கான ஒரு சோதனைத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்