மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அகஸ்தியமலை பகுதியில் இருந்து சமீபத்தில் வளைந்த கால் கொண்ட மரப் பல்லி இனமானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் புதிய மரப் பல்லி இனத்திற்கு புகழ்பெற்ற மெல்லுடலிகள் ஆய்வாளர் N.A. அரவிந்த் அவர்களின் நினைவாக அரவிந்த் நிலவாழ் மரப் பல்லி என்று பெயர் வழங்கப் பட்டுள்ளது.
உருவவியல் மற்றும் மூலக்கூறு டிஎன்ஏ தரவுகளில் உள்ள அதன் தனித்தன்மையின் அடிப்படையில் இந்தப் புதிய இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
இதன் அறிவியல் பெயர் சிர்ட்டோடாக்டைலஸ் அரவிந்தி என்பதாகும்.
இந்த இனமானது இதுவரையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் மற்றும் தக்கலை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே கண்டறியப் பட்டு உள்ளது.
இந்தப் பகுதியானது தமிழ்நாட்டின் அகஸ்தியமலை உயிர்க்கோளக் காப்பகத்திற்கு உட்பட்டது.
அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் காணப்படுகின்ற மரப் பல்லி என்பது ஒரு ஊர்வன இனமாகும்.
கெக்கோனிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியத் தங்க நிற மரப் பல்லி இனமானது இந்தியாவின் தமிழ்நாடு, ஒரிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்டது.
கெக்கோனிடே குடும்பத்தைச் சேர்ந்த மரப் பல்லி இனமானது இந்தோ-மலாயன் பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது.