TNPSC Thervupettagam

அரிட்டாபட்டி பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம்

November 25 , 2022 605 days 754 0
  • மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களை மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
  • அரிட்டாபட்டி கிராமத்தில் அமைந்த (மேலூர் தொகுதி) 139.63 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு மற்றும் மீனாட்சிபுரம் கிராமத்தில் (மதுரை கிழக்குத் தாலுக்கா) அமைந்த 53.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஆகியவை அரிட்டாபட்டி பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாக அழைக்கப் படும்.
  • சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப் படுகிற அரிட்டா பட்டி கிராமமானது, கரும்பழுப்பு ராசாளி, இராசாளி மற்றும் போனெல்லி கழுகு ஆகிய மூன்று முக்கிய ஊண் உண்ணிகள் உட்பட சுமார் 250 வகையான பறவைகளைக் கொண்டுள்ளது.
  • இது இந்திய எறும்புத் திண்ணி, தேவாங்கு மற்றும் மலைப்பாம்புகள் போன்ற வன விலங்குகளின் உறைவிடமாகவும் உள்ளது.
  • இப்பகுதி ஏழு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள ஒரு குன்று போல அல்லது ஒரு நீர்ப் பிடிப்புப் பகுதியாகச் செயல்படுகிறது.
  • 16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆனைகொண்டான் குளம் இங்கு அமைந்துள்ளது.
  • பல்வேறு பெருங்கற்கால கட்டமைப்புகள், குடைவரைக்  கோயில்கள், தமிழ் பிராமியக் கல்வெட்டுகள் மற்றும் சமணப் படுக்கைகள் இந்தப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்