300 மில்லியன் மக்களைப் பாதித்து வரும் சுமார் 7,000 அரிய வகை நோய்கள் தற்போது இருப்பதாக உலகளாவிய ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
எக்ஸ்ட்ராபோலேஷன் (பொதுக் கணிப்பு) மூலம், இந்தியாவில் இந்த வகை நோய்கள் 70 மில்லியன் வரை இருக்கக் கூடும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் இந்த நோய் பாதிப்பு எண்ணிக்கைகள் 500க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளன.
இந்த அரிய வகை நோய்கள் எந்த எந்த சமூகங்களில் ஏற்படுகின்றன என்பது குறித்த போதுமான தொற்றுநோயியல் தரவுகள் கிடைக்கப் பெறவில்லை.
இந்தக் கோளாறுகளின் பாதிப்புகளை உறுதிப்படுத்துவதற்கு அதிநவீன மருத்துவ துறை சார் கருவிகள் தேவைப்படுகின்றன.
நமது நாட்டில் நிலவும் இந்த அரிய வகை நோய்களுள் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (அதிக பட்ச வியர்வை சுரப்பு), ஹீமோபிலியா (இரத்தம் உறையாமை), லைசோசோமால் சேமிப்பு உறுப்பு கோளாறுகள், அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை போன்றவை அடங்கும்.