EESL என்ற நிறுவனமானது அருண் குமார் மிஷ்ராவினை தனது தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
எனர்ஜி எஃபீசியன்சி சர்வீசஸ் லிமிடெட் (EESL - Energy Efficiency Services Limited) நிறுவனமானது அருண் குமார் மிஷ்ராவினை தனது தலைமை நிர்வாக அதிகாரியாக (மாற்றுப் பணியில்) நியமிப்பதாக அறிவித்து உள்ளது.
EESL நிறுவனமானது ஆற்றல்துறை அமைச்சகத்தின் கீழான பொதுத் துறை நிறுவனங்களின் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
இவர் EESL நிறுவனத்தின் நாடு முழுவதிலுமான செயல்பாடுகளுக்கு பொறுப்பு வகிக்க உள்ளார்.