ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான கீதா மிட்டல் அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான அர்லைன் பச்த் குளோபல் விஷன் விருதினைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருள் ஒருவராக அறிவிக்கப் பட்டு உள்ளார்.
2021 ஆம் ஆண்டு மே 07 ஆம் நாளன்று நடைபெற்ற இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் IAWJ (International Association of Women Judges) என்ற மாநாட்டின் காணொலி மூலமான துவக்க விழாவின் போது இந்த விருதானது வழங்கப்பட்டு உள்ளது.
இவர் இந்த விருதினை மெக்சிகோவைச் சேர்ந்த மார்கரீட்டா லூனா ரமோசுடன் இணைந்து பெறுகிறார்.
சர்வதேச பெண் நீதிபதிகள் கூட்டமைப்பானது (Internation Association of Women Judges - IAWJ) 2016 ஆம் ஆண்டில் இந்த விருதினை உருவாக்கியது.
நீதிபதி மிட்டல் அவர்கள் இந்த விருதினைப் பெறும் முதல் இந்திய நீதிபதி ஆவார்.
நீதிமன்றங்களின் அமர்வு / ஓய்வு பெற்ற நீதிபதிகள், IAWJ அமைப்பிற்கு ஆற்றியப் பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.