TNPSC Thervupettagam

அறிவுசார் சொத்துரிமைக்கான சின்னம் – “IP நானி”

May 23 , 2018 2252 days 729 0
  • மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு “IP நானி” எனும் அறிவுசார் சொத்துரிமைக்கான சின்னத்தை தொடங்கி வைத்துள்ளார்.

  • இந்த சின்னமானது, புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அறிவுசார் சொத்துரிமைக் கொள்கை மீதான மாநாட்டின் போது தொடங்கப்பட்டது.
  • இக்கொள்கையின் முதல் மற்றும் முக்கிய நோக்கமானது “அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights - IPR) விழிப்புணர்வு: சென்றடைதல் மற்றும் உயர்வு” என்பதாகும்.
  • மிக இளம்வயதிலேயே படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான திறன்களை பள்ளிக் குழந்தைகளிடையே வளர்ப்பதற்காக IPR மீதான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வகையில் IPR மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான மையம் “IP நானி” சின்னத்தை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு அனிமேஷன் வீடியோக்களை குழந்தைகளுக்காகத் தயாரித்துள்ளது. IPR மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான மையம் (CIPAM - Cell for IPR Promotion and Management) ஆனது தொழிலகக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (DIPP) கீழ் செயல்படும் ஒரு தொழில்முறை அமைப்பாகும்.
  • இவ்வகையிலான ஊக்கம் தரும் வீடியோக்களை உருவாக்குவதற்காக CIPAM ஆனது, ஐரோப்பிய யூனியனின் IP அலுவலகத்துடன் கூட்டிணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்