துணைக் கடற்படைத் தலைவரும் இந்திய அரசின் தலைமை நீரியல் வரைபட நிபுணருமான வினய் பத்வார் பிரித்தானிய உயர் ஆணையரிடமிருந்து அலெக்சாண்டர் டால்ரிம்பிள் (Alexander Dalrymple) என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
நீரியல் வரைபடம் மற்றும் கடல்சார் வரைபடம் ஆகிய துறைகளில் அவர் ஆற்றியத் தலைமைத்துவத்திற்கு அங்கீகாரமாக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதிற்கு கடற்படைத் தலைமையகத்தின் முதல் நீரியல் வரைபட நிபுணரின் நினைவாக இந்தப் பெயரிடப்பட்டுள்ளது.
உலகெங்கிலுமான நீரியல் வரைபடத்துறை வரைபடவியல் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் தரநிலைகளை உயர்த்தும் முயற்சியில் ஒருவர் ஆற்றும் பங்கின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்படுகிறது.