நாகாலாந்து மாநிலத்தின் வனக் காவலரான “அலெம்பா இம்சுங்கர்” என்பவருக்கு “புவி நாள் அமைப்பு நட்சத்திர விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதானது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சர்வதேச சுற்றுச்சூழல் அரசு சாரா அமைப்பான புவி நாள் அமைப்பினால் வழங்கப்பட்டது.
இவர் நாகாலாந்தின் கிப்கயர் மாவட்டத்தில் உள்ள பக்கிம் வன விலங்கு சரணாலயத்தில் வனக் காவலராகப் பணியாற்றுகிறார்.
இவர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பிற்கு அவர் எடுத்த முயற்சிகளுக்காக இந்தப் புகழ்பெற்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
புவி நாள் அமைப்பானது 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று முதலாவது புவி நாளின் போது ஏற்படுத்தப்பட்டது.