ஆக்ஸ்பாம் அமைப்பானது “Tightening the Net” என்று தலைப்பிடப்பட்ட புதிய அறிக்கை ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டது.
பல நாடுகளால் அறிவிக்கப்பட்ட நிகர-சுழியக் கார்பன் இலக்குகள் ஆனது கார்பன் உமிழ்வுகளைக் குறைப்பதற்கான அவற்றின் முன்னுரிமையிலிருந்து விலகச் செய்வதற்கான ஆபத்து மிக்க மாற்றாக இருக்கலாம் என இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் அதிகப்படியான கார்பன் உமிழ்வினை நீக்குவதற்கு சுமார் 1.6 பில்லியன் ஹெக்டேர் அளவிலான காடுகள் தேவை என இந்த அறிக்கை கூறுகிறது.
உலக வெப்பமயமாதலை 1.5°C என்ற அளவிற்குக் கீழ் குறைப்பதற்கும், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் மீள முடியாத சேதங்களைத் தடுப்பதற்கும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் கார்பன் உமிழ்வினை 2010 ஆம் ஆண்டில் இருந்த நிலையிலிருந்து 45% வரை குறைக்க வேண்டும்.
தற்போது உமிழ்வினைக் குறைக்கத் திட்டமிட்டுள்ள நாடுகளின் முயற்சியானது 2030 ஆம் ஆண்டுக்குள் 1% குறைப்பினை மட்டுமே நல்கும்.