வெப்பமண்டலப் புயல்கள், வெள்ளங்கள் மற்றும் வறட்சிகளின் காரணமாக இந்தியா சராசரியாக ஆண்டுக்கு 87 பில்லியன் டாலர் வரையிலான இழப்பினைச் சந்தித்து உள்ளது.
ஆசியாவின் பருவநிலை அறிக்கையில் (2020) இது கூறப்பட்டுள்ளது.
உலக வானிலை அமைப்பானது இது போன்ற முதல்வகையிலான ஒரு பல நிறுவன அறிக்கையினை வெளியிட்டது.
சீன நாடானது அதிகபட்ச சராசரி வருடாந்திர இழப்பினைக் கண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
அதிகபட்ச சராசரி வருடாந்திர இழப்பானது அதிக வறட்சியுடன் தொடர்புடையது.
2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயுள்ள சுந்தரவனப் பகுதியைத் தாக்கிய அம்பன் புயல் இந்தியாவில் 2.4 மில்லியன் மக்களையும் வங்காளதேசத்தில் 2.5 மில்லியன் மக்களையும் இடம்பெயரச் செய்தது.