TNPSC Thervupettagam

ஆசிய-பசிபிக் மனித வள மேம்பாட்டு அறிக்கை 2024

November 10 , 2023 252 days 363 0
  • அதிக வருமானம் மற்றும் செல்வச் சமத்துவமின்மை கொண்ட முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
  • ஆனால் பல பரிமாண வறுமையில் வாழும் மக்களின் பங்கு ஆனது, 2015-16 மற்றும் 2019-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • இந்தியாவில், 2000 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், தனிநபர் வருமானம் ஆனது 442 டாலரிலிருந்து 2,389 டாலராக உயர்ந்துள்ளது.
  • அதேசமயம், 2004 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், வறுமை விகிதங்கள் ஆனது (ஒரு நாளைக்கு 2.15 டாலர்) 40 சதவீதத்தில் இருந்து 10 சதவிகிதம் ஆக சரிந்துள்ளன.
  • நாட்டின் மக்கள்தொகையில் 45 சதவீதத்தினர் மற்றும் 62 சதவீத ஏழைகளைக் கொண்ட மாநிலங்களில் வறுமை நிலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையே காணப் படுகிறது.
  • உலக நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சிக்கு (192 மில்லியன் மக்கள்) இந்தியா 24 சதவீதப் பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தப் பிராந்தியத்தில் ஒரு நாளைக்கு 2.15 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான வருமானம் பெறும் நிலையில், 185 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமை நிலையில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்