TNPSC Thervupettagam

ஆசிய ராஜாளிக் கழுகு இனப் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம்

April 16 , 2023 461 days 322 0
  • உலகின் முதல் ஆசிய ராஜாளிக் கழுகுகளுக்கானப்  பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ளது.
  • இதற்கு ஜடாயு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் (JCBC) எனப் பெயர் சூட்டப்பட உள்ளது.
  • 15 வருட திட்டக் காலம் கொண்ட இது கழுகுகளின் எண்ணிக்கையைக்  குறைந்தபட்சம் 40 ஆக உயர்த்துவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதில் பிடிக்கப்பட்ட இந்தக் கழுகுகளை இனப்பெருக்கம் அடைய செய்து அவற்றைக் காடுகளுக்குள்  விடுவிக்கச் செய்வதன் மூலம் இந்த உயிரினங்களின் ஒரு நிலையான எண்ணிக்கையைப் பராமரிப்பதே இதன் நோக்கமாக உள்ளது.
  • வட இந்தியாவில் செந்தலைக் கழுகுகள்  (Sarcogyps calvus) உள்ளூர் மயமாகியுள்ளன.
  • 2004 ஆம் ஆண்டில், IUCN ஆல் குறைந்தபட்ச கவனம் தேவைப்படும் இனம் என்ற நிலையிலிருந்து 'அச்சுறு நிலையில் உள்ளவை’ எனும் நிலைக்கு  இவ்வினங்கள் மாற்றப் பட்டது.
  • 2007 ஆம் ஆண்டில், இது IUCN அமைப்பின்  சிவப்புப் பட்டியலில் 'ஆபத்தான நிலையில் உள்ளவை' எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்