TNPSC Thervupettagam

ஆசிரியர் தினம் – செப்டம்பர் 05

September 8 , 2022 717 days 313 0
  • இந்த ஆண்டு ஆசிரியர் தினத்திற்கான கருத்துரு 'நெருக்கடியில் முன்னணி, எதிர் காலத்தை மறுசீரமைப்பு செய்தல்' என்பதாகும்.
  • நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் ஆனது 1962 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
  • 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் தேதி பிறந்த இவர், இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகவும் (இரண்டு முறை 1952/62) மற்றும் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் (1962/67) பணியாற்றினார்.
  • 1954 ஆம் ஆண்டில் ராஜாஜி மற்றும் சர்.சி.வி.ராமன் ஆகியோருடன் இணைந்து இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்