ஆட்டுக்கல் பொங்கலா என்பது கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஆட்டுக்கல் பகவதி ஆலயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பிரபலமான மலையாளத் திருவிழாக்களுள் ஒன்றாகும்.
இந்த விழாவானது மலையாள மாதமான மகரம் அல்லது கும்பத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கி, இரவில் ஒரு புனிதப் பலியாகக் கருதப்படும் குருதித் தர்ப்பணம் என்ற நிகழ்வுடன் நிறைவடைகிறது.
இது 10 நாட்கள் அளவிலான ஒரு திருவிழாவாகும்.
சிலரின் நம்பிக்கைகளின் படி, இந்த ஆலையமானது, ‘சிலப்பதிகாரம்‘ என்ற தமிழ்க் காப்பியத்தின் ஒரு மையக் கதாபாத்திரமான கண்ணகியின் மறு அவதாரமாகும்.