டாக்டர் இம்தியாஸ் சூலிமான் என்பவருக்கு மேவ்ரிக் எனும் ஒரு தினசரிப் பத்திரிக்கை நிறுவனத்தினால் வழங்கப்படும் ஆண்டிற்கான சிறந்த தென் ஆப்பிரிக்கர் என்ற ஒரு விருதானது வழங்கப் பட்டுள்ளது.
இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் சேவையாளரும் மற்றும் “Gift of the Givers” எனும் ஒரு பேரிடர் நிவாரணக் குழுவின் நிறுவனரும் ஆவார்.
இந்த அறக்கட்டளை மற்றும் நிவாரண அமைப்பானது நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நிவாரணப் பணிகளையும் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மக்களுக்கு உதவிகளையும் வழங்கியுள்ளது.