TNPSC Thervupettagam

ஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம்

November 4 , 2022 623 days 376 0
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது ஒரு முக்கிய நடவடிக்கையாக, தனது ஒப்பந்தத்தில் உள்ள பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு புதிய ஊதிய சம பங்குக் கொள்கையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
  • இதன் மூலம் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கும் சம அளவிலானப் போட்டிக் கட்டணத்தை அது விதிக்கிறது.
  • கிரிக்கெட்டில், போட்டி வாரியான கட்டணம் தவிர, தக்க வைப்பு கட்டண முறை என்ற ஒன்றும் உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இவ்வாறு செய்த முதல் நாடு நியூசிலாந்து  ஆகும்.
  • இதே போல், இந்திய மேசைப் பந்தாட்டக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் குழுவானது 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் அனைத்து தேசிய மண்டலப் போட்டிகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகையை வழங்குவதாகக் கூறி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்