இந்தத் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலத்தில் மூன்று நினைவுச் சின்னங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன.
ஸ்ரீகாகுளத்தில் உள்ள சாலிஹண்டத்தில் உள்ள பெளத்த மிச்சங்கள், குண்டூரின் நாகார்ஜுனகொண்டாவில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் அனந்தப்பூரில் உள்ள வீரபத்ரா கோயில் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நினைவுச் சின்னங்கள் கூடுதல் வசதிகளுடன் சுற்றுலாவை ஊக்குவிக்கும் தளங்களாக மாற்றப்படும்.
இந்தத் திட்டத்தை கலாச்சார அமைச்சகமானது 2014 ஆம் ஆண்டில் தொடங்கியது.