ஆத்ரேயபுரம் பூதரெகுலுக்கு புவிசார் குறியீடு
September 21 , 2023
302 days
254
- அரிசி மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட ‘ஆத்ரேயபுரம் பூதரேகுலு’ என்ற இனிப்பு வகைக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த இனிப்பு உற்பத்தியானது ஆத்ரேயபுரம் கிராமத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இது உறுதி செய்கிறது.
- இந்தக் கிராமமானது ஆந்திரப் பிரதேசத்தின் கோனாசீமா மாவட்டத்தில் கோதாவரி நதிக் கரையில் அமைந்துள்ளது.
- MTU-3626 ரக அரிசியானது இந்த இனிப்பு வகையின் முக்கிய மூலப்பொருள் ஆகும்.
- இந்த ரக அரிசியானது அந்தப் பகுதியில் ‘பொண்டாலு’ என்று அழைக்கப்படுகிறது.
- இது கோனாசீமா பகுதியில் அதிகம் விளைவிக்கப்பட்டு, கேரளாவில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/21-75.png)
Post Views:
254