மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது சுவச் பாரத் திட்டம் மற்றும் சுவச் சர்வவேக்சன் மதிப்பீடு ஆகியவற்றின் கீழ், ஆந்திரப் பிரதேசத்தின் 3 நகரங்களுக்குத் ‘தண்ணீர் உபரி’ சான்றிதழை வழங்கியுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் உபரி சான்றிதழ் பெற்ற நகரங்களைக் கொண்ட முதல் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் மாறியுள்ளது.
அந்த மூன்று நகரங்களாவன;
விசாகப்பட்டினம் மாநகராட்சிக் கழகம்,
விஜயவாடா மாநகராட்சிக் கழகம்,
திருப்பதி மாநகராட்சிக் கழகம்
இந்தியாவில் மொத்தம் 9 நகரங்களுக்கு “தண்ணீர் உபரி” சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது.