ஆந்திரப் பிரதேச மாநில அரசானது அம்மாநில அரசுப் பணியின் அனைத்து வருங்காலப் பணிகளுக்கும் நேர்காணல் செயல்முறைகளை நீக்குவதற்கான ஒரு அரசு முறை உத்தரவினை வெளியிட்டுள்ளது.
இதில் நிர்வாக அதிகாரிகள் பதவிகளும் அடங்கும்.
இருப்பினும், துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிக வரி அதிகாரி, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி போன்ற பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் தக்க வைக்கப் பட்டுள்ளன.
இந்தச் சீர்திருத்தங்களானது அதன் சிறப்புத் தலைமைச் செயலாளர் J. சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் அமல்படுத்தப் பட்டுள்ளன.