2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று விஜயவாடாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க விருக்கின்றார்.
ஆந்திரப் பிரதேச சட்ட சபையில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி 151 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 25 மக்களவை இடங்களில் 22 இடங்களில் இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இவர் தற்பொழுது முதலமைச்சராக இருக்கும் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தினார்.
இவர் பிரதமர் மோடியை சந்தித்து ஆந்திரப் பிரதேசத்தின் சிறப்பு மாநில அந்தஸ்திற்கான கோரிக்கையைப் பிரதமரிடம் முன்வைத்தார்.
சிறப்பு மாநில அந்தஸ்து (SCS – Special Category Status)
SCS என்ற கருத்துருவானது 5-வது நிதி ஆணையத்தினால் முதன்முதலாக 1969 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது சில பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்திய நிதியுதவி மற்றும் வரிச் சலுகைகள் என்ற முறையில் முன்னுரிமை அளித்திட வழி வகுக்கின்றது.
முதன்முதலில் அஸ்ஸாம், நாகாலாந்து மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு SCS அந்தஸ்து வழங்கப்பட்டன.
இதன் பின்னர் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் SCS அந்தஸ்து வழங்கப்பட்டன.
ஆனால் 14-வது நிதி ஆணையம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மூன்று மலை மாநிலங்கள் (ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட்) ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கான “சிறப்பு மாநில அந்தஸ்தை” நீக்கியுள்ளது.
அதற்குப் பதிலாக இந்த ஆணையம் மத்திய அரசிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரிப் பகிர்வை 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக அதிகரிக்குமாறுப் பரிந்துரைத்துள்ளது.