இந்தியாவில் உள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆம்ப்லிஃபி 2.0 (வாழக்கூடிய, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள நகர்ப்புற இந்தியாவுக்கான மதிப்பீடு மற்றும் கண்காணிப்புத் தளம்) எனும் தளத்தைத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இருந்து மூலத் தரவை மையப்படுத்தவும் நெறிப்படுத்தவும் இது தொடங்கியுள்ளது.
இது இறுதியில் 4,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தரவை உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே மொத்த டீசல் நுகர்வு, நீர் தரச் சோதனை, ஆண்டு சுகாதாரச் செலவு, குடிசைப்பகுதி மக்கள் தொகைப் புள்ளிவிவரங்கள் மற்றும் சாலை விபத்து இறப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பல தகவல்களை வழங்குகிறது.