இந்தியாவின் பழமையான ஆயுதத் தளவாட தொழிற்சாலையின் உற்பத்தி 1802 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று தொடங்கப்பட்டது.
இது கொல்கத்தாவிலுள்ள காசிப்பூரில் அமைந்துள்ளது.
ஆயுதத் தளவாட தொழிற்சாலைகள் வாரியம் (Ordnance Factory Board – OFB)ஆனது உலகில் 37வது மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் ஆசியாவில் 2வது மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் இந்தியாவில் மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் விளங்குகிறது.
OFB ஆனது “பாதுகாப்பின் நான்காவது தூண்” என்றும் “இந்திய ஆயுதப் படைகளுக்குப் பின்னால் இயங்கும் படை” என்றும் அழைக்கப்படுகிறது.
OFB ஆனது இந்திய அரசின் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும்.
இந்திய ஆயுதத் தளவாட தொழிற்சாலைகள் இந்திய இராணுவப்படை, இந்திய கடற்படை, இந்திய வான்படை ஆகிய முப்படைகளுக்கும் ஆயுதங்களை வழங்கி வருகிறது.