இந்தத் தினமானது 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 அன்று அனுசரிக்கப் படுகிறது.
தேசத்திற்கான சேவையில் நமது படை வீரர்கள் ஆற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை அங்கீகரித்து அதனைக் கௌரவிப்பதே இந்தத் தினத்தின் ஒரு நோக்கமாகும்.
பீல்ட் மார்ஷல் K.M. கரியப்பா (KM Cariappa) நாட்டிற்கு ஆற்றியச் சேவைகளுக்கு மரியாதை வழங்கும் விதமாகவும் அவரை நினைவு கூறும் வகையிலும் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இவர் 1953 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று ஓய்வு பெற்ற இந்திய ஆயுதப் படைகளின் முதல் இந்தியத் தலைமைத் தளபதி ஆவார்.