TNPSC Thervupettagam
February 15 , 2022 886 days 514 0
  • இந்தியப் பனிச்சறுக்கு வீரரான ஆரிப் கான், 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் இரண்டு போட்டிகளுக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
  • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 அன்று சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது அவர் ஒரு சிறிய அளவிலான இந்திய அணியை வழி நடத்தினார்.
  • இவர் ஸ்லாலோம் மற்றும் ஜெயன்ட் ஸ்லாலோம் (பனிச்சறுக்கு) போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
  • பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் ஒரே ஒரு இந்தியப் போட்டியாளர் இவரே ஆவார்.
  • இவர் காஷ்மீரில் பிறந்தவர் ஆவார்.
  • 2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அரச முறையில் புறக்கணிப்பதாக இந்தியா அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்