புகழ்பெற்ற மகளிர் உரிமை ஆர்வலர், SEWA (சுய தொழில் மகளிர் சங்கம்) நிறுவனர் எலா பட் அகமதாபாத்தில் காலமானார்.
SEWA என்பது 1972 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய மகளிர் கூட்டுறவு மற்றும் தேசியத் தொழிற்சங்கங்களில் ஒன்றாகும்.
SEWA அமைப்பானது 1974 ஆம் ஆண்டில் மகளிருக்கு சிறு கடன்களை வழங்குவதற்காக ஒரு வங்கியை நிறுவி, தனக்கென ஒரு புதியப் பிராந்தியத்தினை நிறுவியது.
18 இந்திய மாநிலங்களில் அமைந்துள்ள அதன் அலகுகளைத் தவிர, தெற்காசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுய தொழில் செய்யும் பெண்களும் SEWA அலகுகளை அமைத்துள்ளனர்.
SEWA அமைப்பானது, இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் முதல் ஆசிரிய உறுப்பினரான கமலா சவுத்ரியின் பெயரில் கமலா என்ற கஃபே ஒன்றையும் நடத்தச் செய்கிறது.
எலா மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிற்குப் பரிந்துரைக்கப் பட்டதோடு, திட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும், உலக வங்கி போன்ற அமைப்புகளின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
2007 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக நெல்சன் மண்டேலா அவர்களால் நிறுவப்பட்ட உலகத் தலைவர்களின் குழுவான எல்டர்ஸ் குழுவில் இவர் இணைந்தார்.
இவர் அகமதாபாத்தில் மகாத்மா காந்தி அவர்களால் நிறுவப்பட்ட பல்கலைக் கழகமான குஜராத் வித்யாபீடத்தின் வேந்தராகவும் பணியாற்றினார்.
இவர் பத்ம பூஷன், ராமன் மகசேசே விருது மற்றும் அமைதிக்கான இந்திரா காந்தி சர்வதேப்ச பரிசு மற்றும் பல விருதுகளையும் பெற்றவர் ஆவார்.