TNPSC Thervupettagam

ஆற்றலுக்கான இந்தியாவின் முதல் ஆலோசனை மையம்

May 20 , 2018 2255 days 658 0
  • இங்கிலாந்து அரசினுடைய உதவியுடன் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமானது (Indian Institute of Technology -IIT) இந்தியாவின் முதல் எரிபொருள் ஒழுங்குமுறை மையத்தை (Centre for Energy Regulation-CER) துவங்கியுள்ளது.
  • ஆற்றல் ஒழுங்குமுறைக்கான இந்தியாவின் இத்தகு முதல் வகையிலான இம்மையத்தின் நோக்கமானது ஆற்றல் மற்றும் எரிபொருள் துறையில், கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் மீது சுதந்திரமாக ஆலோசனை வழங்குவதே ஆகும்.
  • இம்மையமானது இந்தியாவின் ஆற்றல் துறையில் ஒழுங்குமுறை ஆராய்ச்சியினை (regulatory research) மேம்படுத்துவதற்காக IIT கான்பூரின் தொழிற்துறை மற்றும் பொறியியல் துறையினால் (Department of Industrial and Management Engineering) தொடங்கப்பட்ட ஓர் துவக்கமாகும்.
  • இந்த எரிபொருள் ஒழுங்குமுறை மையம் மற்றும் அதனுடைய அடையாளம் காணப்பட்ட செயல்பாடுகளுக்கு இங்கிலாந்து அரசின் சர்வதேச மேம்பாட்டிற்கான துறை (Department for International Development-DfID) நிதியினை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்