ஆற்றல் செயல்முறை அறிக்கையானது சர்வதேச ஆற்றல் நிறுவனம், சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம், ஐக்கிய நாடுகள் புள்ளியியல் பிரிவு, உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு எண் 7 ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் உலகம் தழுவிய விலை குறைவான, நம்பத்தகுந்த, நீடித்த மற்றும் நவீன ஆற்றல் அணுகலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, உலக அளவில் மின்மயமாக்கல் விகிதச் செயல்பாடானது 2010 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை நிலையான அளவில் அதிகரித்துள்ளது. இது 2010 ஆம் ஆண்டில் 83%லிருந்து 2018 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 90% ஆக அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், மின்சார அணுகல் தொடர்பாக மிகப்பெரிய பற்றாக்குறை உள்ள முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
நைஜீரியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் இந்தியா ஆகிய 3 மிகப்பெரிய பற்றாக்குறையுள்ள நாடுகள் முறையே 85 மில்லியன், 68 மில்லியன் மற்றும் 64 மில்லியன் மக்களுக்கு மின் பற்றாக்குறையைக் கொண்டு உள்ளன.