ராமகுண்டத்திலுள்ள தேசிய அனல்மின் நிலையக் கழகத்திற்கு இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆற்றல் தலைமை விருதானது வழங்கப் பட்டுள்ளது.
இந்தப் புகழ்மிக்க விருதினை ராமகுண்டம் NTPC நிறுவனம் தொடர்ந்து 3வது ஆண்டாகப் பெற்றுள்ளது.
ISO 50001 தரநிலைகளின்படி ஆற்றல் மேலாண்மை அமைப்பினைச் செயல்படுத்தச் செய்தல், ஆற்றல் செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பகுதிகளில் ஆற்றப்படும் முன்மாதிரியான செயல்திறன் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றிற்காக ஆற்றல் தலைமை விருதானது வழங்கப்படுகிறது.