பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆனது தன்னிச்சையாக பறக்கும் விமான தொழில்நுட்பச் செயல்விளக்கத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இதன் மூலம், ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்திற்கான பல கட்டுப்பாடுகளில் முன்னணித்துவம் பெற்ற நாடுகளின் முதன்மைக் குழுமத்தில் இந்தியா இணைந்து உள்ளது.
இது அமெரிக்க இராணுவ விமானப்படையில் உள்ள அமெரிக்கன் நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனத்தின் B-2 ‘ஸ்பிரிட்’ போன்ற மேம்பட்ட குண்டுவீச்சு விமானங்களுக்கு இணையானதாகும்.