உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலிய நாட்டின் ஆஷ்லே பார்டி தமது 25 வயதிலேயே ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் போட்டி, 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டி, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டி ஆகிய 3 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவுப் பட்டத்தினை வென்றுள்ளார்.
டென்னிஸ் தவிர, 2014-16 ஆகிய ஆண்டுகளில் டென்னிஸ் போட்டியிலிருந்து ஒரு இடைவெளியினை மேற்கொண்ட போது பகுதியளவுத் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.