பஞ்சாப் பணிப் பிரிவினைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியக் காவல்பணி அதிகாரி இக்பால் சிங் லால்புராவை தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக மத்திய அரசு மீண்டும் நியமித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லால்புரா முதன்முதலாக இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவர் ரோபர் என்ற சட்டமன்றத் தொகுதியில் (போட்டியிட்டுத் தோல்வியுற்றார்) பாஜக வேட்பாளராக போட்டியிட டிசம்பர் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.