“சமூக ஊடகத்தின் நெருக்கடி நிலை” என்ற தலைப்பைக் கொண்ட 2019 ஆம் ஆண்டின் இணையச் சுதந்திரம் குறித்த ஒரு அறிக்கையானது சர்வதேச இணையக் கண்காணிப்புக் குழுவான “தி பிரீடம் ஹவுஸ்” என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக இணையச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் உலகின் மிக மோசமான நாடாக சீனா தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இணைய சுதந்திர நிலையைப் பொறுத்தவரை பாகிஸ்தான் ஒரு 'சுதந்திரமற்ற நாடாக' அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இந்தியாவிற்கு ஒட்டுமொத்தமாக 55 மதிப்பெண்கள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் இந்திய நாட்டில் இணையச் சுதந்திர நிலை ‘பகுதியளவு சுதந்திரமுடையதாக உள்ளது’ என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இணையச் சுதந்திரத்தில் உலகின் சிறந்த பாதுகாவலராக ஐஸ்லாந்து நாடு விளங்குகின்றது.
2019 ஆம் ஆண்டில் அதன் இணையச் சுதந்திர மதிப்பெண்ணில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பதிவு செய்த நாடு எத்தியோப்பியா ஆகும்.
இது உலகெங்கிலும் உள்ள 65 நாடுகளில் நடத்தப்பட்ட இணையச் சுதந்திரம் குறித்த ஒரு விரிவான ஆய்வு ஆகும்.
2019 ஆம் ஆண்டின் அறிக்கையானது அதன் தொடரில் 9வது அறிக்கையாகும்.