கேரள அரசானது விரைவில் இணையவழியிலான மருந்துக் கண்காணிப்பு வசதியைத் தொடங்க உள்ளது.
இது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ நிறுவனங்களில் மருந்துகளின் இருப்பு மற்றும் விநியோகத்தைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சில அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் உட்பட மருந்துகளுக்குக் கூட தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த வசதியானது அறிமுகப் படுத்தப் படுகிறது.