TNPSC Thervupettagam

இணையவழி விளையாட்டு எதிர்ப்பு மசோதா மீண்டும் ஏற்பு

March 27 , 2023 482 days 259 0
  • தமிழ்நாடு சட்டசபையானது, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்குபடுத்துச் செய்யும் ஒரு மசோதாவினை எந்தவித மாற்றமும் இல்லாமல் மீண்டும் நிறைவேற்றியது.
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று இது ஆளுநரால் ஓர் அவசரச் சட்டமாக வெளியிடப் பட்டு அக்டோபர் 03 அன்று அரசிதழில் அறிவிக்கப் பட்டது.
  • அதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப் பட்டது.
  • இது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெறச் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
  • 141 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 06 ஆம் தேதியன்று, ஆளுநர் அவர்கள் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநிலச் சட்டமன்றத்திற்கு சட்டம் சார்ந்தத் தகுதி இல்லை என்று கூறி இந்த மசோதாவினைத் திருப்பி அனுப்பினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்