கேரள மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சுமார் 2 மில்லியன் குடும்பங்களுக்கு "இலவச" அதிவேக இணைய இணைப்பை வழங்க கண்ணாடி இழைசார்வலையமைப்புத் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இணைய அணுகலை ‘குடிமக்களின் அடிப்படை உரிமையாக’ ஆக்குவதாக கேரள அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது.
பின்லாந்து, எஸ்தோனியா, பிரான்சு, ஸ்பெயின், கிரீஸ், கோஸ்டா ரிகா போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இணையத்தை “அடிப்படை மனித உரிமை” என்று அறிவித்துள்ளன.