TNPSC Thervupettagam

இணைய சுதந்திரம் குறித்த அறிக்கை 2023

October 19 , 2023 274 days 350 0
  • ‘2023 ஆம் ஆண்டு இணைய சுதந்திரம் குறித்த அறிக்கை: செயற்கை நுண்ணறிவின் அடக்குமுறை சக்தி என்ற தலைப்பிலான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகளாவிய இணைய சுதந்திரம் ஆனது தொடர்ந்து 13வது ஆண்டாக குறைந்துள்ளது.
  • 29 நாடுகளில் இயங்கலையில் மனித உரிமைகளுக்கான சூழல் மோசமடைந்துள்ளது.
  • 20 நாடுகளில் மட்டுமே இணைய சுதந்திரத்திற்கு உகந்த சூழல் பதிவாகியுள்ளது.
  • மேலும், 41 நாடுகளில், தனிநபர்கள் இயங்கலையில் தாங்கள் வெளியிடும் அறிக்கைகளால் தாக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.
  • ஐஸ்லாந்து இணைய சுதந்திரத்திற்கான சிறந்த சூழலைக் கொண்டுள்ளது.
  • சீனா, தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக, இணைய சுதந்திரத்திற்கான உலகின் மோசமான சூழல் கொண்ட நாடாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • மியான்மர் இயங்கலை சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடு விதிக்கும் உலகின் இரண்டாவது அடக்குமுறை மிகுந்த நாடாகும்.
  • இந்தியாவில் மிதமான அளவிலான எண்ணிம சுதந்திரம் உள்ளது.
  • இந்திய அரசானது, கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற மற்றும் ஆளும் கட்சியை விமர்சிக்கும் விமர்சனங்களை குறைக்கின்ற வகையில் அதன் சட்ட கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தணிக்கையை இணைத்துள்ளது.
  • விரிவடைந்து வரும் தணிக்கை முறையால் இந்திய ஜனநாயகத்திற்குப் பாதகமான விளைவுகள் ஏற்படும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்