இது இந்தியக் கடற்படையின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு எதிராக மேற் கொள்ளப் பட்ட ட்ரைடென்ட் நடவடிக்கைத் தொடங்கப் பட்டதையும் இந்தத் தினம் நினைவு கூர்கிறது.
இந்தியக் கடற்படை என்பது நமது நாட்டினைக் கடலின் மேற்பரப்பிற்கு மேலேயும், கடல் பரப்பிலும், கடல் பரப்பிற்குக் கீழான பகுதிகளையும் பாதுகாத்து வரும் ஒரு முப்பரிமாணப் படையாகும்.
இந்தியாவின் கடற்படையை உருவாக்கிய சத்ரபதி சிவாஜி போஸ்லே "இந்தியக் கடற்படையின் தந்தை" என்று கருதப்படுகிறார்.