இந்தியாவானது, உலகளாவியப் பட்டு உற்பத்தியிலும் அதன் நுகர்விலும் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2017-18 ஆம் ஆண்டில் 31,906 மெட்ரிக் டன்னாக இருந்த இந்தியாவின் கச்சாப் பட்டு உற்பத்தியானது, 2023-24 ஆம் ஆண்டில் 38,913 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
2017-18 ஆம் ஆண்டில் 223,926 ஹெக்டேராக இருந்த மல்பெரி தோட்டப் பயிரிடல் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 263,352 ஹெக்டேராக அதிகரித்தது.
2017-18 ஆம் ஆண்டில் சுமார் 1,649.48 கோடி ரூபாயாக இருந்த பட்டு மற்றும் பட்டுப் பொருட்களின் ஏற்றுமதியானது, 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 2,027.56 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.