மீன்வளத்துறை, மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஆனது, இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையத்தின் (IOTC) தரவு சேகரிப்பு மற்றும் புள்ளியியல் (WPDCS19) தொடர்பான 19வது பணிக்குழுவை அமைத்து வருகிறது.
இது இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்தியாவின் மீன்வளத் துறையால் நடத்தப்படும் ஒரு முக்கிய சந்திப்பு ஆகும்.
இது உலகம் முழுவதிலும் உள்ள சூரை மீன்வளத் துறையில் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைக்கும்.
IOTC தற்போது 31 ஒப்பந்த நாடுகளையும், லைபீரியா மற்றும் செனகல் ஆகிய இரண்டு ஒத்துழைப்பு சார்ந்த ஒப்பந்தம் சாரா நாடுகளையும் கொண்டுள்ளது.
சூரை மீன் வர்த்தகம் மட்டும், வருடாந்திர வர்த்தக மதிப்பில் 41 பில்லியன் டாலர் (2018 ஆம் ஆண்டில்) மதிப்பினை கொண்டுள்ளது.