TNPSC Thervupettagam

இந்தியாவின் அஸ்திரா ஏவுகணை

September 17 , 2017 2496 days 917 0
  • முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்ட தொலைதூர இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் அதிநவீன “அஸ்திரா” ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO / டி.ஆர்.டி.ஓ) மற்றும் இந்திய விமான படையின் (Indian Air Force- IAF) கூட்டு முயற்சியில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டது.
  • இது காட்சி வரம்புக்கு அப்பாற்பட்ட வான் இலக்குகளை வானிலிருந்து ஏவப்பட்டு தாக்கி அளிக்கும் ஏவுகணை (Beyond Visual Range Air-to-Air Missile - BVRAAM) ரகம் ஆகும்
  • இந்த ஏவுகணை 154 கிலோ எடையும், 20 கிலோ மீட்டரிலிருந்து 110 கிலோ மீட்டர் வரையுள்ள இலக்குகளை அழிக்க வல்லது.
  • அடுத்த ஆண்டு “அஸ்திரா” ஏவுகணை இந்திய விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்