இந்தியாவின் எஃகு மனிதர் என்று அழைக்கப்படும் ஜாம்ஷெட் J இரானி காலமானார்.
தொழில்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2007 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இவர் 1996 ஆம் ஆண்டில் ராயல் பொறியியல் அகாடமியின் சர்வதேச உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார்.
இந்திய-பிரிட்டிஷ் நாடுகளுக்கிடையே வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கான அவரது பங்களிப்புகளுக்காக வேண்டி 1997 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணி அவர்களால் இவருக்கு கௌரவ நைட்ஹூட் (வீரத் திருத்தகை) பட்டமானது வழங்கப் பட்டது.
2008 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசினால் வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப் பட்டது.