TNPSC Thervupettagam

இந்தியாவின் டி.என்.ஏ. கைரேகை தொழில்நுட்பத் தந்தை

December 12 , 2017 2414 days 2017 0
  • இந்தியாவின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் மற்றும் இந்தியாவின் டி.என்.ஏ கைரேகை தொழில்நுட்பத் தந்தையுமான (DNA Finger Printing) லால்ஜி சிங் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
  • ஆராய்ச்சி கள அளவிலும், தடயவியல் பயன்பாட்டின் அளவிலும், DNA கைரேகை தொழில்நுட்பத்தை இந்தியாவில் மேம்படுத்துவதில் முக்கிய கருவியாக இருந்த தலைவர்களில் லால்ஜி சிங்-கும் ஒருவராவார்.
  • அனைத்து உயிர் இனங்கள் மற்றும் பல்வேறு நோய்களின் DNA கைரேகை (DNA Finger Printing) மற்றும் DNA கண்டறிதலுக்கான (diagnostics) முதன்மை மையமாக DNA கைரேகை மற்றும் கண்டறியும் மையத்தை (CDFC – Centre for DNA Finger Printing and diagnostics) உருவாக்குவதற்கான பணி 1990-களில் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனரான இவர் அதன் இயக்குநராகவும் 1998 முதல் 2009 வரை பணியாற்றியுள்ளார்.
  • இவர் 2001-முதல் 2014 வரை இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தின் 25-வது துணைவேந்தராகவும் பணிபுரிந்துள்ளார்.
  • இவர் நலிவடைந்த பிரிவு மக்களை குறிப்பாக ஊரக மக்களை பாதிக்கும் மரபியற் குறைபாட்டு நோய்களை கண்டறியவும், சிகிச்சையளிக்கவும் நோக்கம் கொண்டு செயல்பட்ட ஜினோம் பவுண்டேஷன் எனும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் ஓர் அங்கமாகவும் பணிபுரிந்துள்ளார்.
  • மேலும் இவர் கவுரவமிக்க பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்