இந்தியாவின் மிகப்பெரிய சிறுகடன் வழங்கீட்டு நிறுவனச் சந்தை
July 9 , 2023
377 days
205
- 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி பீகார் மாநிலமானது, இந்தியாவிலேயே அதிக சிறுகடன்களைப் பெற்ற ஒரு மாநிலமாக மாறி தமிழ்நாடு மாநிலத்தினை முந்தி உள்ளது.
- இது மார்ச் மாதக் காலாண்டில் மொத்தக் கடன் வழங்கீட்டுப் பிரிவில் பதிவான 13.5 சதவீத அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ளது.
- 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, பீகாரின் சிறுகடன் (MFI) மதிப்பு 48,900 கோடி ரூபாய் ஆகும்.
- இது ஒட்டு மொத்த துறைக் கடன்களில் 14.5 சதவிகிதம் ஆகும்.
- அதே சமயத்தில், தமிழ்நாட்டின் சிறு கடன்கள் 46,300 கோடி ரூபாயாக இருந்தது.
- மொத்த நிலுவைக் கடனில் இது 13.7 சதவீதமாக உள்ளது.
- பீகாரில் ஒரு கடனாளியின் சராசரி நிலுவை வழங்கீடு 27,200 ரூபாயாகும்.
- இது தமிழ்நாட்டில் உள்ள 26,600 என்ற மதிப்பை விட சற்று அதிகமாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-76.png)
Post Views:
205