கர்நாடகாவில் உள்ள துமகுருவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையினைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
2016 ஆம் ஆண்டில் பிரதமர் அவர்கள் இந்த ஆலைக்கான அடிக்கல்லினை நாட்டினார்.
ஹெலிகாப்டர்கள் பாதுகாப்புப் படையில் தரைப்படைகளுக்கு போதுமான வான்வழி உதவிகளை வழங்கச் செய்தல் மற்றும் எதிரியின் வான்பாதுகாப்பினைச் சீர் குலைக்கச் செய்தல் போன்ற முக்கியப் பங்குகளை வகிக்கின்றன.