இந்தியாவின் முதலாவது இரவுநேரப் போக்குவரத்து கைபேசி செயலி
February 25 , 2022 878 days 459 0
அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, அசாமின் கௌகாத்தி நகரில் பாயும் பிரம்மபுத்ரா நதி மீதான சரக்குப் போக்குவரத்துச் சேவைகளுக்காக இந்தியாவின் முதலாவது இரவு நேரப் போக்குவரத்து கைபேசி செயலியை வெளியிட்டுள்ளார்.
இது சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஒரு முதன்மை அறிவியலாளர் K. ராஜுவுடன் இணைந்து அம்மாநிலப் போக்குவரத்துத் துறையினால் உருவாக்கப் பட்டது.
கௌகாத்தி மற்றும் வடக்கு கௌகாத்தி இடையிலான முதல் இரவுநேர உள்நாட்டு நீர் வழி சரக்குப் போக்குவரத்தானது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று தொடங்கப் பட்டது.