இந்தியாவின் முதல் கடலடி இரட்டைச் சுரங்கப்பாதை
May 9 , 2023
438 days
254
- தெற்கு மும்பையில் அமைக்கப்பட்டு வரும் கடலடி இரட்டைச் சுரங்கப்பாதைகள் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் திறந்து வைக்கப்படும்.
- இது இந்தியாவின் முதல் கடலடி இரட்டைச் சுரங்கப் பாதையாக விளங்கும்.
- 12.19 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சுரங்கப் பாதைகள், கடல் மட்டத்திற்குக் கீழே 17-20 மீட்டர் ஆழம் வரையில் அமைக்கப் பட்டு வருகிறது.
- இதில் ஆறு சாலை கடக்கும் பாதைகள், நான்கு பாதசாரித் தளங்கள் மற்றும் இரண்டு வாகன ஓட்டி வழித் தடங்கள் இடம்பெற உள்ளன.
- ஒவ்வொரு சுரங்கப் பாதையும் சுமார் 3.2 மீட்டர் அகலமுள்ள மூன்று வழித் தடங்களைக் கொண்டிருக்கும்.
- இந்த சுரங்கப்பாதையின் அதிக ஆழமானப் பகுதியானது மலபார் மலைக்கு அருகில் 72 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.
Post Views:
254