TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கடலோர காவல் கல்விச்சாலை

March 16 , 2018 2319 days 770 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது கடலோரக் காவலுக்கான தேசிய கல்விச்சாலையை (National Academy of Coastal Policing-NACP) தொடங்குவதற்கு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.
  • இது திறம் வாய்ந்த முறையில் இந்தியாவின் கடற்கரைகளைப் பாதுகாப்பதில் கடலோரக் காவல் படைகளுக்கு   பயிற்சி   அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நாட்டின் முதல் தேசிய கடலோரக் காவல் கல்விச்சாலை ஆகும்.
  • இது குஜராத் மாநிலத்தின் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் துவங்கும்.
  • குஜராத்தில் உள்ள கடலோரப் பகுதியான தேவ்பூமி துவாரகா மாவட்டத்தின் ஒக்ஹாவில் (Okha) அமைந்துள்ள குஜராத் மீன்வள ஆராய்ச்சி மையத்தில் (Gujarat's Fisheries Research Centre) இந்த கல்விச்சாலை  அமையவுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிந்தனையாளர் குழு, காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Bureau of Police Research and Development- BPRD)   இந்த கல்விச்சாலையின் நிறுவல் மற்றும்  செயல்பாட்டை ஒருங்கிணைக்கும்.
  • கடலோரக் காவலுக்காக முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகு தேசிய கல்விச்சாலையானது பாதுகாப்புப் படைகள் மற்றும் பாரா மிலிட்டரி படையின் அணிகளால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும்.
  • கடலோர மாநிலங்களின் கடற் பாதுகாப்பு படைகளின் (Marine forces) திறன்களை கூர்மைப்படுத்துவதற்காக இந்த கல்விச்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • எல்லைப் பாதுகாப்புப் படையானது (Border Security Force - BSF) இந்த கல்விச்சாலை வளாகத்திற்கு பாதுகாப்பை வழங்கும்.
  • இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த திறன் பயிற்றுவிப்பாளர்கள் (Faculty) இந்த கல்விச்சாலையில் பணிபுரிவர்.
  • எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவற்படை ஆகியவை இணைந்து இந்த கல்விச்சாலையை நடத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்